• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 23 மார்ச், 2012

    அன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்


    அன்று தான் உண்மையில் நான் வருந்தினேன் 







    உன் அகம் புறம் இரண்டையும்
    ஊடுருவி உன்னை உண்மையுடன்
    உணர்ந்து அறிந்தவனும் நான் தான்

    உன் உள் மனஉழைச்சலை என் முன்னே கூறி
    உள்ளம் நீ நெகிழ்ந்த போது – உன்
    கண்ணைத் துடைக்க மாட்டாத பாவியும் நான் தான்

    உன் வாழ்க்கையில் நீ அதிகம் பார்த்ததும் என்னைத் தான்
    உன்னை விட உன் முகத்தை அதிகம் ரசித்தவனும் நான் தான்

    மேடையில் நீ ஆட நாள் குறித்து போதும் - உன்
    ஆட்டத்தை முதலில் இரசித்தவனும் நான் தான்

    தாயகத்தில் தவித்திருப்போர்க்குத் தானம் வழங்கத்
    தயாள குணம் உனக்கில்லையென்று உன்னை பழித்திருப்பார்க்கு . உன்
    தாராள குணத்தை எடுத்துக்காட்டி சாட்டையடி
    கொடுக்கமுடியாத பாவியும் நான் தான்

    நீ பிறந்தது தொட்டு உனக்கும் எனக்கும்
    ஒரு  இறுக்கமான தொடர்பு இருந்து கொண்டுதான் இருக்கின்றது
    எத்தனை தடவை ஆடை மாற்றி என்முன்னே தோன்றினாலும்
    அத்தனை முறையும் உன்னை ரசித்து உனக்காக சேவைபுரியும்
    என்னை நீ இறுகத் துடைப்பாயே 
    அன்று கூட உன்னை நான் நொந்ததில்லை – ஆனால்
    உன் தவறைத் தட்டிக் கேட்ட தாயின் 
    அதட்டலை என்முன்னே வந்து திட்டித் தீர்த்தாயே – அப்போது
    உன்னை ஓங்கி அறைய முடியாது நின்றேனே – அன்றுதான்
    உண்மையில் நான் வருந்தினேன்.

    24 கருத்துகள்:

    1. பதில்கள்
      1. உங்கள் வருகைக்கும் அபிப்பிராயத்துக்கும் மிக்க நன்றி ஐயா . தொடருங்கள்

        நீக்கு
    2. நல்லதொரு பதிவு. இன்றைய உண்மை நிலமையும் அது தான். வருந்தமட்டுமே முடிகிறது உண்மையில்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இப்போது .கண்ணாடியாய் பல மனிதர்கள் . பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சார்

        நீக்கு
    3. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்கன்னு...எங்கயோ கேட்ட நினைவு...-:)

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அது அந்தக் காலம் இப்போது திருப்பி அடிக்கிற காலம் ரெவேரி.

        நீக்கு
      2. வெளிநாட்டில் அடிக்க முடியாமல் இந்திய மண்ணை தொட்டவுடன் கையை ஓங்கிய பெற்றோர் கதைகள் பல...

        நீக்கு
    4. வரிவடிவில் படிப்பதை விட தங்க்கள் குரலோடு கேட்கையில்
      கவிதைய்ன் உள்ளார்ந்த அர்த்தம் நெஞ்சினுள்
      ஈட்டியாய் மிகச் சரியாய்ப் பாய்கிறது
      ஈற்றடிகள் மிக மிக அருமை
      இப்படியே தொடர்ந்து தர வேணுமாய்
      அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. எப்போதும் என் குரல் வருகைக்கு உங்கள் பாராட்டுக்கள் கிடைக்கும். என்ன கொஞ்சம் வேலை அதிகம். நீங்கள் தரும் ஊக்கமே பதிவுகள் தொடர்ந்து தர உந்துதலாக இருக்கின்றது. முயற்சிக்கின்றேன் .நன்றி சார்

        நீக்கு
    5. கவிதையும் அதன் ஒலிவடிவமும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
    6. உன்னை விட உன் முகத்தை அதிகம் ரசித்தவனும் நான்தான்.. --

      ரசித்த வரிகள்..

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உண்மைதான். எமது காலங்களில் அதிகம் கண்ணாடியைத்தானே பார்க்கின்றோம் . வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

        நீக்கு
    7. பதில்கள்
      1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

        நீக்கு
    8. கவிதையை ஒலிவடிவிலும் அமைத்தது அருமை. வித்தியாசமான முயற்சி.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

        நீக்கு
    9. கண்ணாடி உங்களுடன் பேசுவதான கற்பனையா. ?யூகித்துக் கொள்ள வேண்டுமா.? கவிதை படித்து புரியவில்லை. பின்னூட்டங்களுக்கு உங்கள் பதிலைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

      பதிலளிநீக்கு
    10. இன்னும் சற்று தெளிவாக இருந்திருக்கலாமோ.?கண்ணாடி பேசுவதான கற்பனை யூகிக்க வேண்டுமா.?

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...