• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 23 ஜனவரி, 2012

    இச்சு இச்சு




       


    படபடக்குது பட்டாம் பூச்சி
    மனசுக்குள்ளே என்ன ஆச்சு
    கட்டி அணைத்து இச்சுஇச்சு
    கன்னம் ரெண்டும் போச்சுபோச்சு

    கதிரவன் முன் எழும்பியாச்சு
    சாமிபடத்தில் சந்தனக் குச்சு
    சந்தோஷமனதில் ஏத்தி வைச்சு
    சக்கரவாக கச்சேரி வைச்சு
    கட்டி அணைத்து இச்சுஇச்சு

    ஆசையெல்லாம் சேர்த்துவைச்சு
    அன்னையர்தின நாளும் ஆச்சு
    அன்புச் செல்வம் ஆர்வப்பேச்சு
    அன்பளிப்புக் கவிதை வீச்சு
    அம்மாவின் வாழ்வின் மூச்சு
    கட்டிஅணைத்து இச்சுஇச்சு

    பிஞ்சு எண்ண ஆசை நெஞ்சு
    பிள்ளை பேசும் வெள்ளைப்பேச்சு
    உள்ளம் எங்கும் உண்மை வீச்சு


    பொய்மை  வாழ்வு இஞ்சி அளவும்
    மிஞ்சிடாது இன்பங் காண
    எஞ்சியுள்ள காலம்வரை 
    மச்சிபோல காப்போம் வாழ்வை. – என்றும்
    விஞ்சி கிடைக்கும் இச்சுஇச்சு.

                                  
    மச்சு – வீட்டின் கூரை 
                  

    8 கருத்துகள்:

    1. //பிள்ளை பேசும் வெள்ளைப்பேச்சு
      உள்ளம் எங்கும் உண்மை வீச்சு//

      ஆம் கெளரி. கள்ளம் கபடம் அற்ற மழலை பேச்சுக்கு இடு இணை ஏதும் இல்லை.

      சிறப்பான கவிதை.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உள்ளத்தில் கள்ளம் சேர மழலைப் பேச்சு மறைந்து போகின்றது: நன்றி ராம்வி

        நீக்கு
    2. அருமையான கவிதை.
      சுண்டி இழுக்கும் தலைப்பு.
      மழலைகள் உலகம் மகத்தானது.
      பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

      பதிவுக்கும், பகிர்வுக்கு மிக்க நன்றி.

      அன்புடன் வை. கோபாலகிருஷ்ணன்.

      பதிலளிநீக்கு
    3. பின்னூட்டமிட முடியவில்லை ஏனெனெனத் தெரியவில்லைதங்கள் கவிதையைப்
      படிக்கும் எவருக்கும்மடியில் குழந்தையைக் கிடத்திக் கொஞ்சுகிற சுகம்
      நிச்சயம் பொங்கிப் பெருகும்அத்தனை அருமையான சொல்லாடலுடன் கூடியஅன்புப்
      பிரவாகத்தை படைப்பில் உணர முடிகிறதுஅருமையான படைப்புபதிவாக்கித்
      தந்தமைக்கு நன்றி

      பதிலளிநீக்கு
    4. தொடர்ந்து நல்ல ஆக்கங்களை எழுத வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...