• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 4 அக்டோபர், 2011

    மணமகள் மாங்கல்யம்




    கொழுமை கொஞ்சும் கோமளமேனிக் 
    கோதை கொண்டாள் திருமணக்கோலம்
    கயல் இரண்டு களிநடம் புரியும் சாயலிலே
    காரிகை கவின்மிகு கண்கள்
    நித்திலமாய் நெற்றியிலே 
    கச்சிதமாய் ஒரு குங்குமப் பொட்டு
    வனப்பும் வாளிப்பும் வார்த்தெடுத்த ஆக்கை
    சிவப்பும் செம்மஞ்சள் படடும் சீர் உடுத்து 
    புனைபல புனைந்து அணிபல அணிந்து
    இட்ட அடிநோக எடுத்த அடி கொப்பளிக்க
    பட்டுவிரலாலே பல வண்ணச் சரமெடுத்து
    பக்கம் வந்தடைந்தாள் ஏந்திழையாள்
    பாதிவழித் துணை நாயகன் நாடி
    நறவம் அனைய குரலாள்
    நலங்கள் அனைத்தும் காக்கும்
    ககனம் வாழ் காதலனோ! எனக்
    கடைக்கண் பார்வை கணக்கெடுக்க
    அம்மி மிதித்தோர் அருந்ததி பார்த்து 
    அண்டம் ஆய பொறை அவணியில் காக்க
    சங்குக் கழுத்தில் தொங்கவோர்
    தங்கச் சரட்டை அங்கமாய் அணிந்து – தன்
    சொந்தச் சிறையில் பந்தலிட்டான்
    சொந்தப் பெயரில் திருமதி இட்டான்


    என்னால் எழுதப்பட்ட இக்கவிதை மெல்லிசை மன்னன் எம்.பி. பரமேஸ் அவர்களால் திருமணவீடுகளில் பாடப்படுகின்றது.




    13 கருத்துகள்:

    1. அர்த்தம் மிக்க பாடல் சகோதரி...

      பதிலளிநீக்கு
    2. அழகு கவிதை.
      எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
      மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.

      பதிலளிநீக்கு
    3. திருமணவீடுகளில் பாடப்படும் அர்த்த்ம் பொதிந்த இனிமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..

      பதிலளிநீக்கு
    4. திருமண விழாவின் சூழலை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்திட்டுது கவிதை..

      பதிலளிநீக்கு
    5. சிறப்பான பதிவு மன்றல் நாள் கண்ணில் தெரிகிறது வாழ்த்து விண்ணை முட்டுகிறது பாராட்டுகள் .

      பதிலளிநீக்கு
    6. நன்று. பாடலையும் சேர்த்திருக்கலாமே?

      பதிலளிநீக்கு
    7. நல்ல வரிகள்.
      வாழ்த்துகள்.
      வேதா. இலங்காதிலகம்.
      http://www,kovaikkavi.wordpress.com

      பதிலளிநீக்கு
    8. அழகுத் தமிழில் ஆனந்தப் பாடல், அருமை.வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    9. ஆகா அருமை சகோதரி.

      பாடல் பதிவையும் இணைத்திருக்கலாமே

      பதிலளிநீக்கு
    10. இவ்வழகிய கவிதையை கட்டாயம் அனைத்து திருமணங்களிலும் பாடவேண்டும். மிகவும் நன்றாக அந்த சூழ்நிலைக்கே கொண்டு சென்றுது தங்களி கவிதை, நன்றி.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...