• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 22 செப்டம்பர், 2018

    மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு முதல்நாள் நிகழ்வு படங்களுடன்


    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் - சென்னை, அழகப்பா பல்கலைக்கழகம் - காரைக்குடி, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் - இலங்கை ஆகியவற்றுடன் இணைந்தும், ரீ.ஆர்.ரீ தமிழொலி வானொலியின் அனுசரணையுடனும், பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம் - பாரிசு நடத்திய மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் முன்னெடுப்பில் புரட்டாதி மாதம் 08-09 ஆகிய இரண்டு தினங்கள் பாரிஸின் ஐரொஸ்லாவ் வசேக் அரங்கில் நடைபெற்றது. 

                   இம்மாநாடு இலக்கியச் செவ்வியம், விபுலாநந்தம் என்னும் இரண்டு தலைப்புக்களில் இரண்டு நாள் அமர்வுகளாக அமைந்திருந்தன. இந்நிகழ்வுக்குப் பல கல்வியியலாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும், அமைச்சர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.  







                                       
    08.09.2018 இலக்கியச்செவ்வியம் 
     
    பன்னாட்டு உயர்கல்வி நிறுவன ஆசிரியை தேவமாலாவின் குரலிசை வகுப்பு மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. 


    அதன்பின் செல்வன் தே.பிரவீண் பியானோ இசையுடன் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு உயர்கல்வி நிறுவனக் குரலிசை மாணவர்கள் ந.நிதர்ஷன், ச.ஸ்ரெபான் ஆகியோர்கள் தமிழ்மொழி வாழ்த்து இசைத்தனர். அதன்பின் செல்வி.த.ஆதனா யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்து புஷ்பாஞ்சலி நடனத்தை ஆடி மகிழ்வித்தார். 


    அதனைத் தொடர்ந்து  பேராசிரியர் முனைவர் சதாசிவம் சச்சிதானந்தம் அவர்கள் மாநாட்டுக் கருத்துரையும் வரவேற்புரையும் என்னும் தலைப்பில் இதற்கு முன் நடைபெற்ற இரண்டு மாநாடுகள் பற்றியும் இம்முறை நடக்கவிருக்கின்ற மாநாடு பற்றியும் அவற்றில் ஆற்ற இருக்கின்ற உரைகள் பற்றியும் மிக விளக்கமாக உரையாற்றினார். 


          அதனைத் தொடர்ந்து பிரான்சு நாட்டுக்கான கனம் பொருந்திய இலங்கைத் தூதுவர்
    B.K.Athauda அவர்கள்



    தமிழ்மொழியின் பழைமை பற்றியும், தமது தூதரகத்தில் எம்மொழியிலும் பேசக்கூடிய வசதி வாய்ப்பிருக்கின்றது என்று தனது உரையில் எடுத்துரைத்துள்ளார். பின் இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்த செல்வன் அபிஷேக் அமலேந்திரன் அவர்கள் அற்புதமான சங்கப்பாடல் நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திருமொழி சொல்லாய். அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர் வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா என்ற பாடலுடன் இன்னும் 2 பாடல்களை வயலின் இசையில் இசைத்து எம்மையெல்லாம் மகிழ்வித்தார்.
     

            அதனைத் தொடர்ந்து மாநாட்டுத் தலைவரும் தமிழ்நாட்டுத் தமிழ்மொழி அமைச்சர் மாண்புமிகு க.பாண்டியராஜன் அவர்கள் தமிழ்மொழிப் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் கேட்டபோது 1000 ஏக்கர் நிலத்தை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அளித்தமை, 50 தமிழ்சங்கங்கள் அமைக்க வித்திட்டமை பற்றியும், புலம்பெயர் தமிழ்  காட்சிக் கட்டிடம் தமிழகத்தில் அமைக்கப்பட இருப்பது பற்றியும் இந்தியாவில் 229 கோடி தமிழுக்காக ஒதுக்கியுள்ளார்கள் என்பதையும் தமிழ் வளர்ச்சிக்காக 15 அம்சங்கள் உருவாக்கியுள்ளார்கள் என்பதையும் கூறியுள்ளார்கள். தமிழ் வளர் மையம் அமைத்தல், தமிழ் பண்பாட்டு மையம் அமைத்தல், உலகத்தமிழ்ச் சங்கம் அமைத்தல், 36 அருங்காட்சியகம் அமைத்தல், அகழ்வாய்வுகள் அமைத்தல், இந்தியாக்கு உள்ளேயும் வெளியேயும் விருதுகள் வழங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது, தமிழ்க்கலைக்கூடம், சிற்பக்கலைக்கூடம் ஒன்றிணைத்தல், திருக்குறளுக்கு ஐக்கியநாடுகளின் அங்கீகாரம் கிடைக்க வைத்தல், உலகத்தமிழ் மாநாடு 7 நாடுகளில் நடக்கிறது 14 நாடுகளில் இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை நடத்துதல், கலைக்குழுக்களுக்கு வலுச் சேர்த்தல் போன்ற திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். 

                       


    அதனைத் தொர்ந்து வடமாகாண கல்வி அமைச்சர் ப.சர்வேஸ்வரன் அவர்கள் யுத்தம் முடிந்தும் இன்னும் நாடு சகஜநிலைக்குத் திரும்பவில்லை என்றும் அருங்காட்சியகம், தமிழ் ஆய்வு நூலகம், கலைக்கூடம் போன்றன வடமாகாணத்தில் அமைப்பது பற்றியும், தமிழை சிறப்புப் பாடமாகப் பயில்பவர்களுக்கு வருடாந்தத் தொகையாகப் பணம் கொடுப்பது பற்றியும், தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம் சிறப்புக்கல்வி கற்க 50 இலட்சம் ஒதுக்கியுள்ளமை பற்றியும் எடுத்துரைத்தார்.
              
    அதனைத் தொடர்ந்து சீனத்துக் கலைமகள் உரையாற்றும் போது சீனமொழி, தமிழ்மொழி பற்றிய ஒப்பீடு பற்றியும் சீனா, தமிழ்நாட்டு வணிகம் பற்றியும் வசந்தவிழா பொங்கல் விழா பற்றிய ஒப்பீடு பற்றியும் தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.


     அதனைத் அதனைத் தொடர்ந்து மருத்துவக் கலாநிதி சிவ. தியாகராஜா Ph.D இலண்டன் அவர்கள் சங்ககாலத் தமிழகமும் தொல்லியல் கட்டமைப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார். 


    அவ்வுரையில் சங்ககால இலக்கியம், காலக்கணிப்பு, முச்சங்கங்கள், வரலாற்றாய்வு போன்ற அடிப்படையில் இவருடைய உரை நிகழ்த்தப்பட்டது.


    Dr. Jean – Luc, Chevvilard  (Senior Researcher HTL – University De Diderot, Paris   அவர்கள் ஆங்கிலம், தமிழ், பிரான்ஸ் ஆகிய 3 மொழிகளிலும் பேசினார். யாழ்நூல் பற்றியும், பிங்கலம், நிகண்டு போன்ற அகராதிகள் பற்றியும் கொப்பன்ஹாகனிலுள்ள தமிழ், இலத்தின் அகராதிகள் பற்றிப் பேசினார்.
            
      ஆய்வியல் அமர்வு (1) இலக்கியச் செவ்வியம் ஆய்வுக்கட்டுரைகள்
     
    இவ் அமர்வுக்கு வழக்கறிஞர் செ.சிறீஸ்கந்தராஜா (இலண்டன்) அவர்கள் அமர்வுத் தலைவராகப் பணியாற்றினார்.

     
    1.    பேராசிரியர் விசாகரூபன் (யாழ்பல்கலைக்கழகம், இலங்கை):
     

    சங்க இலக்கியத்தில் தனி மனித ஆளுமை உருவாக்கச் சிந்தனைகள்
    என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    2.    பேரா.பெஞ்சமின் இலெபோ (பிரான்ஸ்)
     

    சங்க இலக்கியங்களில் மெய்ப்பொருள் விழுமியங்கள் என்னும் தலைப்பிலே ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    3.    திருமதி வாசுகி நடேசன் (கல்வியாளர், இத்தாலி)
     

    சங்க இலக்கியங்கள் விபரிக்கும் சாதாரணர்கள் என்ற தலைப்பில் பாட்டுடைத்தலைவர்களாக மன்னர்கள் குறுநிலை மன்னர்கள், அன்றி சாதாரண குடிமக்களை எவ்வாறு விபரிக்கின்றன என்று தன்னுடைய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    4.    திருமதி உமாமகேஸ்வரி(பிரான்ஸ்)
     

    சங்க இலக்கியங்களில் தோழி என்னும் இலக்கியக் கதாபாத்திரம் பற்றிய தன்னுடைய கட்டுரையைச் சமர்ப்பித்தார்.
    சங்க இலக்கியங்களில் தோழிகளின் முக்கியத்துவம் பற்றி தன்னுடைய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    5.    முனைவர். அலெக்சு தேவராசு (சேன்மார்க், ஜேர்மனி)

     
    சங்ககால விளையாட்டுக்களை இக்கால விளையாட்டுக்களுடன் ஒப்பிட்டு ஆய்வுரையைச் சமர்ப்பித்தார்.

    ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தவர்களை தமிழ்மொழி வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சரும் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் பொன்னாடை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவித்தார்கள்.

     
      ஆய்வியல் அமர்வு 2 இலக்கியச் செவ்வியம் ஆய்வுக்கட்டுரைகள்

    நடன ஆசிரியை திருமதி. சி. சர்மிலி அவர்களின் மாணவிகளின் நாட்டிய அஞ்சலி குறிஞ்சித்திணை நடனம் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டியது. அதனைத் தொடர்ந்து ஆய்வியல் அமர்வு ஆரம்பமானது
     

    Dr.Jean – Lue, University de Diderot (Senior Researcher, University de Diderot )

    1.    செ.சிறீஸ்கந்தராஜா
    B.Sc, LL.M  (இலண்டன்)

    புறநானூற்றில் கையறுநிலைப் பாடல்கள் - ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    2.    பேராசிரியை கிருஸ்ணவேணி நொபேர்ட் (யாழ்பல்கலைக்கழகம், 
            இலங்கை)

    தமிழ் அழகியல்: சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட நோக்கு

    3.    க. அருந்தவராஜா (கல்வியியல் விரிவுரையாளர், சுவிற்சலாந்து)

    சங்ககாலக் கட்டமைப்பு நவீனகாலத்திலும் தொடர்கிறதா? என்ற தலைப்பில் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    4.    முனைவர் த.ஆனந்தஜோதி (முதுநிலை விரிவுரையாளர், யாழ்பல்கலைக்கழகம், இலங்கை)

    நற்றிணை காதல் உணர்விற்கு தற்காலப் பரதநடனக் காதல் உணர்விற்கும் இடையிலான ஒப்பீடு என்ற தலைப்பில் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    5.    முனைவர். சோபனா தர்மேந்திரா (முதுநிலை விரிவுரையாளர்,                 
          யாழ்பல்கலைக்கழகம், இலங்கை)

      சங்க இலக்கியங்களில் அஷ்டவித நாயகிகள் என்ற தலைப்பில்                  தன்னுடைய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    6.    இரத்தினசாமி இரமேஸ்வரன் (தமிழ்மொழி வளர் ஆர்வலர், ஜேர்மனி)

    சங்ககால இலக்கியங்கள் ஒரு பார்வை என்ற தலைப்பிலே தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை வழங்கினார்.

    கேள்வி பதில் நேரத்தைத் தொடர்ந்து சிறப்புநிலை ஆய்வாக
    M.Pierre Mendi (Professeur du France de I’LLES)

    வீரயுகக் காவிய ஒப்பீடு – ஆபிரிக்க வீரயுகம் - சங்க இலக்கியம் பற்றிப் பிரெஞ்சு மொழியில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து

    Dr.Prof. Geetanjali Pickert (Mainz University, Germany)


    சங்ககால மருத்துவ முறையும் நவீன கால மருத்துவ முறையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

    இத்துடன் முதல்நாள் ஆய்வரங்கம் முடிவுற்றது. ஆய்வாளர்கள் கௌரவிப்பு, சிறப்புரையாற்றியோர் கௌரவிப்பு, நிகழ்ச்சிகள் வழங்கியோருக்கான நினைவுச் சான்றிதழ்கள் வழங்கியமை, தேநீர் இடைவேளை, மதியபோசன இடைவேளை இவை இந்நிகழ்வில் சிறப்பாக அமையப்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


    Jaffne University Vice Chancellor

                                                                                                             


                                    இரண்டாம் நாள் நிகழ்வு தொடரும் ..................



    வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

    சொல்வாக்கும் செல்வாக்கும்

     Septemper vettimany பத்திரிகையில் வெளிவர இருக்கும் கட்டுரை 




    அறிவும் சொல்லும் ஆற்றலும் உள்ள ஒருவருக்கு அதை வெளியே கொண்டுவர ஏதோ ஒரு உதவி தேவைப்படுகிறது. தனித்து வாழவோ தனியோ ஒரு உற்பத்தியை வெளியிடவோ முடியாது என்னும் போது ஒரு ஊடகத்தின் அவசியம் தேவைப்படுகின்றது. உலகப்படைப்பும் அப்படியேதான் அமைந்திருக்கின்றது. அண்டவெளியிலே சுற்றிவரும் கிரகங்கள் ஒன்றையொன்று சார்ந்தே வாழுகின்றன.

     எமது உடல், மண், நீர், நெருப்பு, ஆகாசம், காற்று, மனது, ஆகியவை ஒன்றோடு ஒன்று சேர்ந்துதான் உற்பத்தியாகின்றன என்று புத்தர் கூறியுள்ளார்.  தனித்து நிற்கும் மரம் கூட வளர்வதற்கு நீரை வேண்டி நிற்கின்றது. தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் அப்படித்தான். பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்று கண்ணதாசன் சொன்னாலும் வாசிக்கப் புத்தகம் கொடுத்த எழுத்தாளன் அம்மேதைக்கு உதவியுள்ளான். ஒரு தனிமனிதனாகப் பிறக்கும் போது தாயின் இரத்தத்தைப் பாலாகக் குடித்தே வளருகின்றான். வளரும்வரை பெற்றோரின் துணையுடனேயே வளருகின்றான். அதன்பின் தன்னுயை வளர்ச்சிக்குரிய ஒரு உதவியை நாடுகின்றான். எனவே ஒருவர் வாழ்வில் பிரகாசித்து நிற்கின்றார் என்றால், அங்கு யாரோ சிலர் பின்னின்று வெளிச்சமிட்டிருக்கின்றார்கள் என்பதை மறுக்கமுடியாது. அதேவேளை அந்த வெளிச்சத்தைக் காண்பதற்கே செல்வாக்கு தேவைப்படுகின்றது என்பது ஒரு வருந்தத்தக்க உண்மையாகும்.

           தன்னை வெளிப்படுத்துவதற்கும் தனது திறமையை விளம்பரப்படுத்துவதற்கும் முனைந்து நிற்கும் மனிதர்கள் எப்படியாவது தமது நிறைவான திறமையையோ, சிறிதளவான திறமையையோ பெரிதாகப் பிரமாண்டமாகக் காட்டப் பிற உதவியை நாடி நிற்கின்றார்கள். அது மனிதனாகவும் இருக்கலாம், இலத்திரனியலாகவும் இருக்கலாம். இதன் மூலம் செல்வாக்கு பெருகுகின்றது. ஆனால், செல்வாக்கு நிறைந்த பிரபலங்கள் தங்கள் சொல்வாக்கை இழக்கும் போதுதான் தமது பெருமையை இழக்கின்றார்கள். சொல்வாக்கு நேர்மையாகவும், சுத்தமாகவும் இருந்தாலேயே செல்வாக்குப் பெருகுகின்றது. செல்வாக்குப் பெருக வேண்டும் என்பதற்காகவும் தமது புகழை மேலே இழுக்க வேண்டும் என்பதற்காகவும் தம் சொல்லில் செயலில் இழுக்கு ஏற்படும் படியாக நடந்து கொள்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

               செல்வாக்கு பணச்செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, இலக்கியச் செல்வாக்கு, சமயச்செல்வாக்கு, சொற்களின் செல்வாக்கு என்பதுபோல்  செல்வாக்குகளை வகைப்படுத்தலாம். இதில் சொற்களின் செல்வாக்கே சொல்வாக்காக அமைகின்றது. இவையெல்லாம் மக்கள் செல்வாக்குகளே. எச்செல்வாக்காக இருந்தாலும் சொல் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. அரசியல்வாதி சொல்வதைச் செய்ய வெண்டும். இலக்கியவாதி எழுதியவாறு நடக்க வேண்டும். பணம் படைத்தவன் நடத்தையில் சொல்லில் சுத்தம் வைத்திருக்க வேண்டும். இச்சுத்தத்திலிருந்து தவறுகின்ற போது தன் செல்வாக்கை இழக்கின்றான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

              நாம் சொல்லுகின்ற சொற்களில் சில செல்வாக்குப் பெறுகின்றன. அல்லது பெற வைக்கின்றோம் உதாரணமாக நான் கூறிய சொல்லும் செயலும் ஒன்றானால் இவ்வுலகம் சொல்லும் உன் செயல் என்னும் என் வார்த்தைகளின் வழியே நான் நடப்பேனேயானால், அச்சொற்கள் எனக்குச் செல்வாக்கை ஏற்படுத்தும். அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை. உண்மையைச் சொல். அது உன் வார்த்தைகளைப் பாதுகாக்கும் என்று வள்ளலார் கூறிய சொல்வாக்கும், புத்தர் கூறிய பல வாக்குகளும் அவருக்குச் செல்வாக்காக அமைகின்றன. நாளும் பலர் மனங்களின் தூய்மைக்குத் துணையாக நிற்கின்றன.

              அறிஞர்கள் கூறுகின்ற வாக்குகளை நாம் தாரகமந்திரமாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவ்வாக்குகள், நாம் தவறுகின்ற போது எம்மனதைத் தட்டித் திருத்தும். உதாரணமாகத் திருக்குறள் கற்று வளர்ந்த எமக்கு ''எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு'' என்னும் வள்ளுவர் சொல்வாக்கு எம்மை தட்டி வழிநடத்துகின்றது அல்லவா! ''யார் சொன்னார் எவர் சொன்னார் என்றிருக்க வேண்டாம். எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப் பார்'' என்று சாக்ரடீஸ் சொல்வாக்கு எம்மைச் சிந்திக்க வைக்கிறது அல்லவா! எமக்கென்று தரமான ஒரு வாக்கை நாம் கொண்டிருக்கும் போது அவ்வாக்கை மீறுகின்ற மனப்பக்குவம் எமக்கு ஏற்படாது என்று நான் நினைக்கின்றேன்.

                ஆனால், நம்மைத் தேடிவரும் செல்வாக்கைக் காத்திருக்காது மனிதன் செல்வாக்கைத் தேடிப் போகின்ற போதுதான் வாழ்க்கையில் தன் நெறி பிறழ்வை அவன் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. அவனுடைய விசுவாசம் சற்று தள்ளிநிற்கின்றது.

                இலக்கியச்செல்வாக்கை எடுத்துப் நோக்கும்போது ஒரு இலக்கியவாதி எத்தனை திறமை இருந்தும் செல்வாக்கிற்குக் கைகட்டி அவன் சேவகம் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. சரியான ஒரு இடத்தைப் பிடிப்பதற்கு அந்த ஊடகத்தின் அல்லது செல்வாக்குள்ள ஒரு மனிதனைத் தேடவேண்டிய அவசியம் தேவைப்படுகின்றது. உதாரணமாக சிறந்த ஒரு கவிஞன் தன் கவிதைகளை எத்தனையோ பத்திரிகைகளுக்கு அனுப்பியும் அவனது கவிதை நிராகரிக்கப்பட்டது. கவலையுற்ற அவ் இளைஞன், கண்ணதாசனிடம் தனது கவிதை ஒன்றைக் கொடுக்க அக்கவிதையை மேடையில் கண்ணதாசன் தனது கவிதை என்னும் பாங்கில் வாசித்தபோது அனைவரும் கைதட்டி ஆரவாரித்தார்களாம். அப்போது கண்ணதாசன் ''இக்கவிதையை நான் எழுதவில்லை. இந்த இளைஞனே எழுதினான்'' என்று அவ் இளைஞனை அடையாளம் காட்டினாராம். நல்ல ஒரு படைப்பாளி தன் திறமையைக் காட்ட செல்வாக்குள்ளோரை நாட வேண்டியுள்ளது. அப்படி அந்தச் செல்வாக்கைப் பெற்றுவிட்டால் தன் சொல்வாக்கில் அவன் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது.

                  எதிர்காலம் எங்கள் கையில் அதனால், சொல்வாக்கைச் சுத்தமாக்குவோம் செல்வாக்கு எம்மைத் தேடிவரும்.

            



    திங்கள், 27 ஆகஸ்ட், 2018

    வயோதிபம் வாழ்வில் வராமல் போகுமா!



    அழகு எதில் இருக்கின்றது என்றால், அது பார்ப்பவர் கண்களில் இருக்கின்றது. இளமையும் அழகுதான் முகத்தில் ரேகை படர்ந்த முதுமையும் அழகுதான். வாழ்வது அவசியமென்றால், முதுமையையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதும், ஆதரிப்பதும் அவசியமே.  முதுமை அருகே இருப்பது இளமைக்கு தொந்தரவு என்று நினைப்பதும், முதுமையைப் பாதுகாக்க இளமைக்கு காலம் கைகொடுக்கவில்லை என்று இளையவர்கள் கலங்குவதும், பிள்ளைகள் மகிழ்ச்சிக்கு இடையூறு எம்மால் வந்துவிடக்கூடாது என்றும், அமைதியாக யார் தொந்தரவும் இன்றி வாழவேண்டும் என்றும், இல்லை கடைசி காலத்தில் கலகலப்பாக பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி விளையாடி நான் வாழவேண்டும் என்று முதுமை நினைப்பதும் அவரவர் மனநிலையையும் வாழ்ந்த சூழலையும் பொறுத்தது.

                 வயதானவர்கள் என்னும் போது தமது வேலைகளைத் தாமே செய்து கொண்டு தமது பிள்ளைகளுக்கு தம்மாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்ற வயதானவர்கள் என்றும், தம்மால் தமது வேலைகளைச் செய்யமுடியாது, சுயமாக நடந்து திரியமுடியாது, தமது உணவுகளைத் தாமே எடுத்து உண்ணமுடியாது, தமது நினைவுகளை இழந்து காணப்படுகின்ற முதியவர்கள் என்றும் இரண்டுவிதமாக வேறுபிரித்துப் பார்க்கலாம்.
                
                  வயதானவர்களை இளையவர்கள் தம்மோடு வைத்திருந்தால், அவர்கள் தொழில் ரீதியான வளர்ச்சிக்கும் பிள்ளைகளின் உடல் அறிவு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்பது உண்மை. அதுகூட பிள்ளைகளின் சொந்த பிரச்சினைகளுக்குள் தலையிடாத வரையிலேயே சாத்தியமாகும். பிள்ளைகள் திருமண பந்தத்துள் இணைந்து தமக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கியபின் பெற்றோர்கள் உண்மையில் அவர்கள் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாக இருக்கின்றது. இவ்வாறான வயதானவர்களில் சிலர், தமக்கென்று ஒரு பொழுதுபோக்கை வைத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் பேரப்பிள்ளைகளே தமக்குப்பாரமாகக் கருதுகின்ற மனநிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது. ஒரு குழந்தை ஒரு இடத்தில் நீண்ட நேரம் விளையாடாதது போலவும், ஒரு கதையைத் திருப்பித் திருப்பிக் கதைப்பது போலவும் வயதானவர்கள் எவ்வளவு நேரம்தான் பிள்ளைகளுடன் விளையாடுவது, அவர்களின் வேலைகளைச் செய்வது எமக்கென்றும் ஓய்வுதேவை என்று கூறுகின்ற வயதானவர்கள் இருக்கவே செய்கின்றார்கள்.

              வாழ்க்கையின் பூரணத்துவம் நாம் பெற்ற பிள்ளைகளுடன் முடிவதில்லை. தமது பிள்ளைகளைக் கொஞ்சி விளையாடிய சுகம் திரும்பவும் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சுவிளையாடுவதற்கு இயற்கை கொடுக்கும் வரம் என்பதை உணரவேண்டும்.  இந்த சுகம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்தக் கன்னங்களின் அழகு, பஞ்சு உடலின் ஸ்பரிசம், அக்குழந்தைகளின் சுட்டித்தனம், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரவணைப்போடு கொடுக்கும் பதில்கள் இவையெல்லாம் நாம் வாழ்ந்த வாழ்வின் பூரணத்துவம் என்பதுடன் சொர்க்கம் என்பதையும் வயதானவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். சுகம் என்று நினைத்தால் சுகம். தொல்லை என்று மனம் நினைத்தால், அது தொல்லை.

                    இதேவேளை இளையவர்களை நோக்கும்போது, தாம் வளர்வதற்கும் தாம் கற்பதற்கும் தமது உடல்நிலை உறுதியாவதற்கும் தமக்கென ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கும் பெற்றோரைப் பயன்படுத்தும் பிள்ளைகள் தமக்கென ஒரு வாழ்க்கை அமைந்தபின் தேவைப்படாத பொருளை தூக்கி எறிவதுபோல் எறிந்துவிடுவது அல்லது சுமையாக எண்ணுவது வழமையாகப்படுகின்றது. காலச்சுழற்சியில் என்றோ ஒருநாள் எல்லோரும் மறையத்தான் போகின்றார்கள். இளையவர்கள் பிரிந்தபின் கலங்குவதைவிட வாழப்போகும் சிறிதுகாலமாவது அவர்களைச் சகித்துக் கொள்வோம் என்று நினைக்க வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் தமது நிலை என்ன என்று சிந்தித்துப் பார்த்தாலே பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகள் திருந்திவிடுவார்கள்.

              திருமணம் செய்து ஒன்றோ இரண்டோ வருடங்களில் பிள்ளைகளைப் பெற்று அதன்பின் பிள்ளைகளுக்காக வாழ்ந்து அதன்பின் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்தபின் நிம்மதியாகக் கணவனுடன் ஒருவருக்கொருவர் துணையுடன் வாழ நினைக்கும் தம்பதிகள் தமது பிள்ளைகளுக்காக தமது துணையைத் தவிக்கவிட்டுவிட்டு தமது பிள்ளைகளின் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை தலைமேல் கொண்டு அவர்களுடன் சென்று விடுகின்றனர். மீண்டும் அந்த ஆண் தன் பாலிய வயதுத் தனிமைக்குத் திரும்புகின்றான். இதுவும் சுகமே என்று சொல்லும் கணவன்மார்களுக்கும் ஒரு கையை இழந்த துயரம் இருக்கவே செய்யும்.

             ஒரு வயதானவர் இறந்தால் ஒரு நூலகம் அழிகின்றது என்பது உண்மை. அனுபவம் கற்றுத்தரும் பாடம் எந்த ஆசானும் கற்றுத் தருவதில்லை. அதனாலேயே பேரப்பிள்ளைகளைத் தமது பெற்றோரிடம் வளர்க்கப் பிள்ளைகள்  கொடுக்கின்றார்கள் என்று சொன்னால், அது நிச்சயமாக இல்லை. இப்போதும் பிள்ளைகள் பெற்றோரைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதுவே உண்மை. ஆனாலும், தாய் மனமோ தந்தை மனமோ வலிகளைத் தாங்கி வரங்களைக் கொடுக்கின்றார்கள் என்பதுவே உண்மை.

             தமது எண்ணங்களைத் துலைத்து, நடக்கத்துணை, இருக்கத்துணை, உணவு உண்ணத்துணை என்று துணையில்லாமல் வாழமுடியாத வயதானவர்களை வீட்டில் வைத்திருக்க முடியுமா? இது இன்றைய கேள்வி. முடியும் என்று மனதால் நினைப்போர் அதற்கான வழிகளைத் தேட வேண்டியது அவசியம். ஜேர்மனியைப் பொறுத்தவரையில் பணம் இருந்தால் பல நிறுவனங்கள் கைகொடுக்கின்றன. மருத்துவக் காப்புறுதி நிறுவனத்தின் பங்களிப்புடன் பெற்றோருக்காகச் சிறு தொகையை பிள்ளைகள் வழங்கினால், வீட்டிற்கு வந்து வயதானவர்களுக்குப் பல துறைகளில் உதவி வழங்க இந்நிறுவனங்கள் கைகொடுக்கின்றன. உடற்பயிற்சி, மூளைத் தொழிற்படுவதற்கான பயிற்சி, நடைப்பயிற்சி, உணவு தயாரித்துக் கொடுத்தல், சரியான நேரத்திற்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தல், காற்று வாங்கக் கூட்டிக்கொண்டு போதல், அவர்களுக்கு விருப்பமானவற்றை வாசித்து விளக்கம் கொடுத்தல், நினைவுகளைத் திரும்பக் கொண்டுவருவதற்கான பயிற்சிகளைக் கொடுத்தல், மருத்துவரிடம் கூட்டிக் கொண்டு போதல், ஆலயம் அழைத்துச் செல்லுதல் போன்ற உதவிகளைத் தமது கண்காணிப்பிலே செய்யக் கூடிய வசதி வாய்ப்புக்களைப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம்.

               இல்லை எங்கள் வீட்டில் எங்கள் பெற்றோருக்கு இடமில்லை என்று நினைப்பவர்கள் வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து இவ்வாறான வசதிகளைச் செய்து கொடுக்கலாம். தேவையேற்படும் போது மட்டும் பெற்றோரைப் போய்ப் பார்க்கலாம். அதுவும் இல்லையென்றால், வயோதிபர் மடங்களில் சேர்த்துவிடலாம். தாயைப் பார்ப்பதுபோல் தெய்வங்களாகப் பவனி வரும் எத்தனையோ தாதிகள் இவ்விடங்களில் பணிபுரிகின்றார்கள். அங்கும் தமது பொறுமையைச் சோதிக்கும் வயதானவர்களை சரியான முறையில் பார்க்காத தாதிகள் உண்டு என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆனாலும், ஆதரவற்று பிள்ளைகளின் நச்சரிப்பில் மனவலியுடன் வாழ்வதைவிட பணம் கொடுத்து சரியான நேரத்தில் தொழிலாகத் தமது கடமையைச் செய்கின்ற தாதிகள் மேலானவர்கள் அல்லவா!
            



    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...