• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 13 நவம்பர், 2022

    Cryonic Technology

     

    இறந்தவர் மீண்டும் எழும்ப முடியுமா? மறுபிறப்பு ஒன்று இருக்கிறதா? ஒரு மணிதனால், 100 ஆண்டுகள் கழிந்தும் வாழ முடியுமா? இவ்வாறான கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றது. சித்தர்கள் ஒரு உடலை விட்டு இன்னும் ஒரு உடலுக்குள் சென்று கூடுவிட்டுக் கூடு பாயும் யுத்தியைக் காட்டியிருக்கிறார்கள். எகிப்து நாட்டவர்கள் இறந்தவர் மீண்டும் எழுவார் என்ற நம்பிக்கையில் அவர்களுடைய உடலை பதப்படுத்தி வைத்து அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் அவர்களுடைய உடலுடன் சேர்த்து மம்மிகள் என்ற பெயரில் பிரமிட்டுகள் செய்திருக்கின்றார்கள். ஆனால் விஞ்ஞானம் நோயால் இறந்த மனிதனை  மீண்டும் உயிருடன் கொண்டுவர முடியும் என்று உறுதியாகச் சொல்லியபடி முயற்சி செய்து செய்து கொண்டிருக்கின்றார்கள். அதுதான் கிறையோனிக். இது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். 



    யாருக்குத்தான் காலங்கடந்தும் வாழ வேண்டும் என்று ஆசை இருக்காது. எனக்கும் ஒரு கவலை இருக்கின்றது. இந்த ரெக்னோலஜி இனிவரும் காலங்களில் எப்படி இருக்கப் போகின்றது. எங்களுடைய மூதாதையர் வீட்டில் இருந்தே திரைப்படம் பார்க்கும் வசதி பெற்றிருக்கவில்லை. கைத்தொலபேசியுடன் உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள வசதி இருந்ததில்லை.

       

    ஆனால், இன்று அந்த வசதியை ரெக்னோலஜி ஆக்கித் தந்திருக்கின்றது. இதைப் போல நானோரெக்னொலஜி மூலம் என்ன எல்லாம் வரும். அதை நாம் பிரயோகிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருக்கிறது. ஆனால், அதற்கேற்ற பணவசதி இருக்க வேண்டாமா. அதுபற்றியே இந்தப் பதிவு  அமைகின்றது. 


    கிறையோனிக் மூலம் நோயால் இறந்த மனிதனை பிரிசேர்வ் பண்ணி வைத்து அந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடனே அந்த மனிதனுக்கு மருத்துவம் பார்த்து அவரை மீண்டும் வாழவைபபதுதான் கிரையோனிக் என்பது. கிரையோனக் என்றால், கிரேக்க மொழியிலே குளிர் என்பது அர்த்தமாகவுள்ளது. ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய உடலை அல்லது உறுப்பை குறைவான குளிரில் அதாவது  −196 °c அல்லது −320.8 °f  இல் பிறிசேர்வ் பண்ணி வைத்தல். அதன்பின் 100 அல்லது அதற்கு மேலும் 1000, 2000, வருடங்கள் கழித்து ஒரு இறந்த மனிதனை எழுப்பலாம் என்னும் ரெக்னோலஜி வருகின்ற போது நானோ ரெக்னோலஜி பயன்படுத்தி என்ன நோயால் இறந்தாரோ அதற்குரிய மருத்துவம் செய்து எழுப்புதல். உதாரணமாக புற்றுநோய் வந்து இறந்தவர்கள் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த பின் மருந்தின் மூலம் பிறிசேர்வ் பண்ணிய உடலை மீண்டும் உயிருடன் எழுப்பலாம். உடம்போ கெட்டுப் போகாது. 1967 இல் முதல் உடல் பதப்படுத்தப்பட்டது. 



    ரொபேர்ட் எடின்பர் என்பவரே இத்தொழில் நுட்பத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். 1963 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில்  கிரையோனிக் நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகில் 7 கிரையானிக் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. 

    இறந்து சில நிமிடங்களுக்குள் வேலையைத் தொடங்கிவிடுவார்கள். முதலில் மூளை செயல் இழக்காமல் இருக்க தேவையான ஒட்சிசன் மூளைக்குக் கொடுக்கப்படும். உடலிலுள்ள இரத்தமும் நீரும் முழுமையாக வெளியேற்றப்படும உடல் சிதையாமல் இருக்க வேதிப்பொருள் இரத்தத்திற்குப் பதிலாகப் பாய்ச்சுவார்கள். பின் ஐஸ்கட்டிகளுக்குள் அந்த உடல் வைக்கப்படும். 




    பின்னர் அந்த உடலை - 196 டிக்கிரி செல்சியஸ் திரவ நைட்ரஜன் நிறைந்த கண்டைனருக்குள் வைத்து மூடிவிடுவார்கள். உதாரணமாக புற்றுநோயால் ஒருவர் உயிரிழந்தால், புற்றுநோய்க்குரிய மருந்தை அந்த உறுப்புக்குச் செலுத்தி நானோ தொழில்நுட்பத்தில் புது உறுப்பாக வளர்க்கப்பட்டு அவருடைய உடலுக்குள் வைக்கப்படும். மூளைக்குத் தேவையான ஒட்சிசனை அளித்து பழைய நினைவுகளைக் கொண்டுவர முடியும். 



    கிரையோயினிக்ஸ் இன்சிரியூட் - 35 ஆயிரம்  அமெரிக்க டொலர் இவ்வாறு பதப்படுத்தத் தேவை என்கிறார்கள்.

    அல்கோல் - 2 இலட்சம் அமெரிக்க டொலர் தேவை என்கிறது 

    ஓகஸ்ட 2022 கணிப்பீட்டின் படி 500 பேர் பிறிசேர்வ் பண்ணப்பட்டுள்ளார்கள். 3000 ககு மேற்பட்டவர்கள். பெயர் பதிவு செய்திருக்கிறார்கள் 

    "நோயாளிகள்" மருத்துவ ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் இறந்த பின்னரே Cryonic  நடைமுறைகள் தொடங்கும். 12. 01.1967 இல் கேன்சர் நோயால் இறந்த கலிபோர்னியா யூனிவேர்சிட்டி சைக்கொலஜி professor James Bedford சடலம் தான் உறைந்த முதல் சடலமாகும். 



     

    மூளையின் அமைப்பு அப்படியே இருக்கும் வரை அதன் தகவல் உள்ளடக்கத்தை மீட்டெடுப்பதற்கு எந்த அடிப்படைத் தடையும் இல்லை என்று கிரையோனிஸ்டுகள் வாதிடுகின்றனர். 

    எதிர்காலத்தில், நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கவும், அவர்களைக் கொன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும் என்று கிரையோனிக்ஸ் வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

    கிரையோனிக்ஸ் விலை உயர்ந்ததாக இருக்கலாம். 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிரையோனிக்ஸைப் பயன்படுத்தி சடலங்களைத் தயாரித்து சேமிப்பதற்கான செலவு America Doller 28,000 முதல் 200,000 வரை இருந்தது.

    ஜெர்மனியின் முதல் கிரையோனிக்ஸ் 96 வயதான முன்னாள் பொறியாளர். பிப்ரவரி 17, ஞாயிற்றுக்கிழமை காலை, டீனிமேஷன் செய்யப்பட்டு, அவர் 6 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 23 அன்று ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருந்து  டெட்ராய்ட்டுக்கு -78°c வெப்பநிலையில் உலர் பனியில் மாற்றப்பட்டு அதன்பின் நோயாளி 5.5 நாட்களில் -196°f க்குக்  குளிரூட்டப்பட்டார். பின்னர் மார்ச் முதலாம் திகதி 2019 அன்று நிரந்தர சேமிப்பிற்காக அமெரிக்காவில் அவருடைய உடல் கிரையோனிக்காக  மாற்றப்பட்டது .



    18.11.2016: இங்கிலாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி லுகேமியாவால் பாதிக்கப்பட்டு, குணமடையாமல் இருந்த போது இந்த உலகத்தில் நான் வாழ வேண்டும் என்றும் ஆசையாக இருக்கிறது என்றும் சமூக நிறுவனங்களிடம் தன்னைப் பதப்படுத்தும்படிச் கேட்டுக் கொண்டாள்.  அதன்படி அவளுடைய உடல் அவள் இறந்தபின்  கிரியோபிரிசேர்வ் செய்யப்பட்டது. அவள் இறப்பதற்கு முன்பே அவளுக்கு இந்த நடைமுறைக்கு  சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது. 

    எனவே நீங்களும் மீண்டும் வாழ விரும்பினால், முயற்சி செய்யலாம். ஆனால், நீங்கள் மீண்டும் எழும்போது உள்ள உலகத்துக்கு ஏற்றபடி உங்களர்ல் வாழமுடியுமோ தெரியாது. வீதியில் ரொபோட்டோக்கள் நடந்து கொண்டு திரியும். வாகனங்கள் வானத்தில் பறக்கும், செயற்கைச சூரியன் இருக்கும். எதை எப்படித் தொடுவது என்று தெரியாமல் உங்களை நீங்கள் அப்டேர் செய்யமுடியாமல் தண்ணீருக்குள் வழுந்து நீந்தத் தெரியாதது போல் தத்தளிப்பீர்கள். யோசித்துப் பாருங்கள். உங்களுடைய கருத்தைப் பகிர மறக்க வேண்டாம். 


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...