• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 6 மே, 2019

    இலங்கையில் மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கொழும்புப் பகுதிகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களும் நுனெபயஅந திரைப்படமும் ஒரு பார்வை



    இலங்கையில் மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கொழும்புப் பகுதிகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களும் Endgame திரைப்படமும் ஒரு பார்வை


    நான், என்னுடைய மதம் தான், என்னுடைய நாடு தான், என்னுடைய மொழி தான், என்னுடைய கடவுள்தான், என்னுடைய தலைவர்தான், என்னுடைய கட்சிதான் பெரியது. அது மட்டுமே இருக்க வேண்டும். அடுத்தது எல்லாம் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்களாலேயே இந்த உலகம் சுக்குநூறாக்கப்படுகிறது. 

                     அனைத்தும் வாழுகின்ற பூமியிலே எமக்கு என்று தனியுரிமை தேடிப் போகும் போது அழிவுகளை எதிர்நோக்குகின்றோம். இலங்கையில் அண்மையில் 8 இடங்களில் நடைபெற்ற குண்டுத்தாக்கல்களினால், 350 பேர்களின் உயிர்கள் மதவாதிகளினால் மனிதாபிமானமே இல்லாமல் சூறையாடப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய அனுபவங்கள் நிறையவே எங்களுக்கு இருக்கின்றன. ஒரு மனிதனைக் கொன்று பல மனிதர்களை அழிக்கும் வழிமுறையே தற்கொலைக் குண்டுதாரிகள். அந்த ஒரு மனிதனைக் கொல்லும் உரிமையே இல்லாத மனிதனுக்கு எப்படிப் பல மனிதர்களைக் கொல்வதற்கு உரிமை இருக்கின்றது. தாமாகவேத் தம்முடைய உயிரை அழிக்க ஒரு மனிதன் முன் வருகின்றான் என்றால், அவனது மூளை எந்த அளவிற்குச் சலவை செய்யப்பட்டிருக்க வேண்டும். இலங்கைச் சம்பவத்தை உலகப் புகழ் பெற்ற End Game என்ற திரைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.

                   என்னுடைய 22 நாட்கள் தொடர் பயணம் 24.04.19 அன்று முடிவுற்றது. முதல் முதலாக முதல்நாள்  ஜேர்மனியில் மட்டும் வெளியீடு செய்யப்பட்டு  ஜேர்மனியில் மட்டும் 60 மில்லியன் டொலர்களைச் சம்பாதித்த  Marvel  Stanley  என்பவர் எழுதிய கொமிக்ஸ் என்னும்     புத்தகத்தை வைத்து ஹொலிவூட் சினிமா படமாக்கிய 22 படங்கள் EndGame  என்னும் இறுதிப்படத்துடன் Avengers உடைய கதை முடிவுற்றது. 

    அண்டவெளிகளும் பூமியும் இணைந்து உலகத்தையே அச்சுறுத்திய ஒரு சக்தியை அழித்த போராக End Game நடத்தப்பட்டது. தன்னுடைய கைகளில் ஒரு கவசத்தை உருவாக்கி அதில் 6 சக்தி வாய்ந்த கற்களைப் பொருத்தி அதி தீவிரமான சக்தியைப் பெறுகின்றார் Thanos.  ஒவ்வொரு கற்களையும் பல உயிர்களை அழித்தே பெறுகின்றார். இறுதிக் கல்லைப் பெறுவதற்கு தன்னுடைய அன்புக்குரிய மகளையே கொல்லுகின்றார். அவ்வாறு அவருக்கு மிகப்பிடித்த ஒன்றை இழந்தாலேயே அக்கல்லைப் பெறமுடியும் என்ற காரணத்தால் தன் மனதுக்குப் பிடித்த வளர்ப்பு மகளைக் கொல்லுகின்றார். உலகத்திலுள்ளவர்களின் தொகை அதிகரித்து விட்டதாகவும் அவர்களைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இக்கொடூரமான கொலைகளைச் செய்கின்றார். மிகப்பிரமாண்டமான சண்டைக்காட்சிகள் அண்டவெளியிலேயுள்ள கிரகங்களில் நடப்பதாகக் காட்டப்படுவது வியக்கத்தக்கதாக இருக்கின்றது. காந்தசக்திகளும், நெருப்பு, அதி கூடிய மின்னல், ஒளிக்கதிர்கள் இவ்வாறு பிரமிக்க வைக்கும் தன்மையில் 3 D யில் ஹொலிவூட் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

    இந்த Thanos ஐ அழிப்பதற்கு பூமியிலும் வேற்றுக் கிரகங்களிலும் இருந்து Hulk, Captain America, Iron Man, Black Widow, Haukeye, Thor, Spiderman, Guardians of the Galaxy(Rocket, Gamora, Groot, Quill, Drax, Nebula, Martis) Doktor Strange, Winter Solder (Bucky Barnes) Warmachine, Black Panther, Antman& Thae Wasp, Captain Marvel, Falcon, Vision, Scarlet Witch என்னும் Avengers ஒன்றாக இணைகின்றார்கள். இவர்களில் சிலருக்கு தனிப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. அனைத்தையும் பார்ப்பவர்களுக்கே End Game பூரணமாகப் புரிந்து கொள்ளும். இதில் infinity War  இல் பலர் மறைந்து விட முக்கிய கதாபாத்தரமான Iron Man எந்த யுத்தமும் தேவையில்லை. அன்புக்குரியவர்கள் பலரை இழந்துவிட்டோம் என்று ஒரு அமைதியான இடத்தில் மனைவி பிள்ளையுடன் வாழ்ந்து கொண்டிருக்க அந்த ஐந்து கற்களையும் அழித்துவிட வேண்டும் அதைக் கையிலே வைத்திருக்கும் Thanos உயிர்களை எல்லாம் அழித்து விடுவார் என்ற தவிப்பில் மீண்டும் Capton America, Black widow போன்றவர்கள் Thanos இருக்கும் இடத்திற்குப் போய் அதிரடித் தாக்குதல் செய்து Thanos  ஐ கொல்லுகின்றார்கள். ஆனால், அவர் அக்கற்களை செயலிழக்க வைத்துவிட்டதாகச் சொல்லுகின்றார். ஆனால், காணமல் போனவர்களை மீண்டும் வரவழைக்க வேண்டும் என்பதற்காக மீதமாக இருக்கும்  Avengers சிலர்  ஒன்று சேருமாறு இவர்கள் சென்று கேட்கின்றார்கள். ஆனால், Iron Man  முடியாது என்று மறுக்கின்றார். பின் தானாக சிந்தித்து நேரத்தைப் பின்நோக்கிச் செல்ல வைக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து காலங்களின் பின்நோக்கிச் சென்று கற்கள் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து அக்கற்களை கைக்கவசத்தில் மாட்டுகின்றார்கள். இவ் ஒவ்வொரு கற்களைக் கண்டுபிடிப்பதற்கும் பல யுத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது. ஆனால், எந்த யுத்தத்திலும் நீங்கள் இரத்தத்தைக் இத் திரைப்படங்களில் காண மாட்டீர்கள். அந்தவகையில் இத்திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருந்தன. 

                  கைக்கவசத்தை மாட்டுகின்ற கை அக்கற்களின் சக்தியைத் தாங்கக் கூடிய சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். மனித உடலுடையவர்களால் முடியாத காரியமாகும். Hulk, Thanos இருவரால் மட்டுமே இந்தக் கற்களின் சக்தியைத் தாங்க முடியும். ஏனென்றால், இவர்கள் இருவருமே மனிதத் தோல் அற்றவர்கள்.  Thanos ஒரு தடைவை  இக்கைக்கவசத்தைப் போட்டு சொடுக்கெடுக்கும் போது அவரால் அழிக்கப்பட்டவர்கள் திரும்பவும் வந்து விடுகின்றார்கள். வந்த நல்லவர்கள் கெட்டவர்கள் அனைவரும் இணைந்து போர் புரிந்த போது Thanos ஐ அழிக்க முடியாது போகின்றது. இந்த நேரத்திலே பந்தாடப்பட்ட கைக்கவசம் Iron Man கைகளுக்கு வர வேறு வழியில்லாமல் அக்கவசத்தை அவர் மாட்டுகின்றார். விரல்களைச் சொடுக்குகின்றார். தீயசக்திகள் அனைத்தும் தூளாகிப் போக இறுதியில் Thanos உம் தூளாக அழிந்து போகின்றார். தன்னுடைய உடலால் தாங்க முடியாது. தனக்கு அழிவு வரும் என்று தெரிந்தும் எம்மோடு 22 படங்களில் கூடவந்த Iron Man உயிரை விடுகின்றார். 

    அதி புத்திசாலியும், மனித இயந்திரங்களையும், நவீன சக்தி வாய்ந்த கருவிகளையும் செய்யக்கூடிய Iron Man உலகத்தைக் காப்பதற்காகத் தன்னுடைய உயிரை மாய்த்தது நெஞ்சம் நெகிழவைக்கும் காட்சியாக இருந்தது. அவருடைய நண்பர்கள் குடும்பத்தினருடன் நாமும் இணைந்து இறுதிக்கிரியையில் கலந்து கொண்டது போன்ற ஒரு உணர்வு எமக்கு ஏற்பட்டது. கண்களில் வடிந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்பவர்களாக இருவர் ஒன்று  Iron Man மற்றையவர் Black Widow ஒரு திரைப்படத்தைப் பார்த்த போதே இவ்வாறான ஒரு உணர்வு ஏற்படும்போது இலங்கையில் 350 உயிர்களைப் பலி எடுக்கத் துடிக்கும் மனிதர்களை நினைக்கும் போது உள்ளம் வேதனையில் கனக்கிறது. 

    குண்டுவெடிப்பில்  உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் 

    4 கருத்துகள்:

    1. அருமையான அலசல்.

      குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு, நானும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்

      பதிலளிநீக்கு
    2. இப்படம் மட்டுமே பார்த்ததால் உங்கள் அளவு உணர்ந்து இரசிக்க இயலாமல் போனது.தங்கள் விமர்சனம் படித்தபின் மீண்டும் பார்க்க இருக்கிறேன்.அருமையான விமர்சனம் வாழ்த்துக்களுடன்

      பதிலளிநீக்கு
    3. அமைதியான ஒரு சூழலை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருந்த நிலையில் இது ஒரு மாபெரும் சோகம்.

      பதிலளிநீக்கு
    4. அருமையான கண்ணோட்டம்
      இறந்தோரின் உறவுகளின் உள்ளங்களை ஆற்றுப்படுத்த இயலவில்லை.
      துயரைத் தான் பகிர முடிகிறது.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...