ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் நடத்தப்படும் கலைஞர்கள் கௌரவிப்பும் வீ. ஜீவகுமாரன்  அவர்களுடைய குதிரைவாகனம்  என்னும் நூல் வெளியீடும் 14.10.2017  அன்று சனிக்கிழமை    பிற்பகல்   14.00 மணியளவில்    நடைபெற இருக்கின்றது.
         வருடா வருடம் நடைபெறும் இந்நிகழ்ச்சி சென்ற வருடம் சில காரணங்களினால் நடித்த முடியாமல் போய்விட்டது. 
கவிஞர் முகில்வாணன், எழுத்தாளர் ஜீவகுமாரன், கவிஞர் பசுபதிராஜா, வில்லுப்பாட்டு ராஜன் ஆகியோர் கௌரவிக்கப்பட இருக்கின்றார்கள். 
                           எழுத்தாளர் ஜீவகுமாரன் அவர்களுடைய குதிரைவாகனம்  என்னும் நூலும் அறிமுகம்  செய்யப்பட இருக்கின்றது. நான்  இந்நூலுக்கான   விமர்சனத்தை செய்ய இருக்கின்றேன். 
            இந்நிகழ்வு சிறப்புடன் அமைந்து எழுத்தாளர் சங்கத்தினரின் முயற்சிகள் முன் எடுப்புக்கள் அனைத்திற்கும் ஆதரவு தரும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று முழுமையாக நம்புகின்றேன்.  
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.  வாழும் போதே கலைஞர்களை வாழ்த்தும் உன்னத முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தந்து அவர்களை வந்து வாழ்த்த வேண்டும் என்று ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஒருவராய்  உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
                           தமிழ் வாழ நாமும் வாழ்வோம் 

போற்றுதலுக்கு உரிய முயற்சிகள்
பதிலளிநீக்குவிழா சிறக்கட்டும்
மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு