• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

    காதலர் தினம் 2016












    உலகவலத்தில் மனிதன் உருவாக உதவிடும் காதல் 
    காதல் இல்லையெனில்   உயிர்கள் தான் ஏது?                                                                                                   
    கடவுளுக்கும் புழு பூச்சிக்கும் காதல்
    கண்டவுடன் கவர்வது காதல் 
    காத்திருக்காமல் மலர்வது காதல்
    வார்த்தைக்குள்ளே தேனைக் கலந்து 
    வாரி இறைப்பது காதல்
    அணைப்புக்குள்ளே மலரை வைத்து
    அள்ளிச் சொரிவது காதல்

    பொய்யும் மெய்யும் கலந்தே தருவது
    போதை மனிதனாய் உலாவ விடுவது
    பெற்றவர் கண்களை மறைக்க வைப்பது
    தமக்குள்ளே ஒரு உலகை வைத்து
    தரையில் நிற்காது வாழ வைக்கும் காதல்

    உலகம் உள்ளவரை தொடரும் காதல்
    உயிர்கள் உள்ளவரை மலரும் காதல்
    காதலும் தேய்வதில்லை 
    காதலர் தினமும் ஓய்வதில்லை

    1 கருத்து:

    1. "காதலும் தேய்வதில்லை
      காதலர் தினமும் ஓய்வதில்லை" என
      அருமையாகச் சொன்னீர்கள்!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...