• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 31 டிசம்பர், 2014

    புத்தாண்டு வாழ்த்துக்கள்


          
     முடிவென் றுலகில் ஏதும் இல்லை
    முடிந்ததாய் எதிலும் சரித்திரம் இல்லை
    விடிந்ததும் உலகம் இருள்வது நியதி
    இருண்டதும் உலகம் விடிவது உறுதி
    மாரியும் ஓர்நாள் கோடையாய் மாறும்
    கோடையும் ஓர்நாள் மாரியாய் திரும்பும்
    கடந்தது கடந்ததை  நினைப்பது வாழ்வு
    நடந்ததை நினைத்தே மாய்வது வீணே

    உலகின் பிறப்பில் பலவித மாற்றம்
    உணர்ந்தே வளர்தோம் உயர்வை அறிந்தோம்
    புதுமை காணவே உழைத்திடும் உலகில்
    பழைமை பேணியே புதுமை காண்போம்
    மறைந்த பதின் நான்கு பதின் ஐந்தை
    மகிழ்வுடன் தந்தே மகிழ்வுடன் பிரிந்தது
    கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகள்
    கற்றவை நினைத்தே திருந்தி வாழ்வோம்


    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    6 கருத்துகள்:

    1. புத்தாண்டு கவிதை அருமை வாழ்த்துகள்
      வாழ்க வளமுடன்
      இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

      பதிலளிநீக்கு
    2. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

      பதிலளிநீக்கு
    3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      பதிலளிநீக்கு
    4. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

      பதிலளிநீக்கு
    5. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

      புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
      http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

      நன்றி
      சாமானியன்
      saamaaniyan.blogspot.fr

      பதிலளிநீக்கு
    6. 6 கருத்தக்களிற்கு முன்னர் முதன் முதலாக
      இங்கு நான் கருத்திட்டேன்.
      அதன் பின்னர் இப்போது வந்தேன்.
      எனது கருத்து இல்லை. ஒன்றுமே புரியவில்லை.
      அதே வரியை முகநூலிலும் போட்டேன்.

      இனிய புத்தான்டு நல் வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...