• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 20 அக்டோபர், 2013

    எதிர்நீச்சல்


     உயிரைக் குடித்திடும் உடனிருந்தே கொல்லும் நோக்காடு
    இடியாய் வரும் துன்பமும் ஓர்நாள் மழையாய் மறுதலிக்கும்
    இன்பமும் துன்பமும் இணைவதுதான் இல்வாழ்க்கை
    இழந்துவிட்ட இன்பமது  இணைகள் சேர ஒன்றிடும்
    பகிர்ந்துரைக்கும் துன்பம் படிதாண்டி ஓடிவிடும்
    எண்ணிஎண்ணி மாய்வதல்ல இவ்வாழ்க்கை
    எதிர்நீச்சல் போட்டுவிடு எண்ணமதைச் செயல்படுத்து
    எள்ளிநகையாடி உதறிவிட இதுவல்லோ நேரம்
    எடுத்துவைக்கும் காலடிகள் ஏற்றத்தைக் காட்டிவிடும்
    பனிகாலம் உறங்கும் மரம் கோடையில் குதூகலிக்கும்
    கரை வந்த அலை கடல்நோக்கித் திரும்பிவிடும்
    கன்னத்துக் கரம் கடுதியாய்விலகட்டும்
    எண்ணத்துத் திடம் சுடராய் மிளிரட்டும்.

    13 கருத்துகள்:

    1. /// எதிர்நீச்சல் போட்டுவிடு எண்ணமதைச் செயல்படுத்து... ///

      அருமை... வாழ்த்துக்கள்...

      பதிலளிநீக்கு
    2. //கன்னத்துக் கரம் கடுதியாய்விலகட்டும்
      எண்ணத்துத் திடம் சுடராய் மிளிரட்டும்.//

      அருமையோ அருமையான வரிகளுடன் இனிமையோ இனிமையான கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    3. ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் ஒவ்வொருவரும் எதிர்நீச்சல்போட்டுத்தான் ஆகவேண்டும் வாழ்க்கையின் நியதி அது.

      பதிலளிநீக்கு
    4. நெஞ்சுக்குள் உரமேற்றும்
      ஆழமான வரிகள்...
      நம்பிக்கை எனும் தோணி ஏறு
      தகைவாய் கடந்து வா
      வாழ்வின் அகடு முகடுகளை என
      ஏற்றுவிக்கும் கவிதை...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உங்கள் வரிகளும் நெஞ்சுக்கு உரம் ஏற்றுகின்றது

        நீக்கு
    5. ''...கன்னத்துக் கரம் கடுதியாய்விலகட்டும்
      எண்ணத்துத் திடம் சுடராய் மிளிரட்டும்!...'''
      சூரியன் கண்ட பனியாகத் துன்பம் விலகட்டும்.
      வேதா. இலங்காதிலகம்.

      பதிலளிநீக்கு
    6. ''..கன்னத்துக் கரம் கடுதியாய்விலகட்டும்
      எண்ணத்துத் திடம் சுடராய் மிளிரட்டும்...'' சூரியன் கண்ட பனியாகத் துன்பம் விலகட்டும். ,-- ---(இக் கருத்து ஒரே நாளில் முகநூலிலும் இங்கும் போட்டேன். இதை இரண்டாவது தடவையாக இங்கு இன்று 21-10-13)இடுகிறேன்).

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...