• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 31 டிசம்பர், 2012

    தையவள் வந்தாள்





    ஆயிரம் ஆயிரம் ஆசைகள் மனதில் 
     ஆனந்தக்கூத்தாட 
    ஆடிக்கழித்திட்ட ஆசைகொண்டே 
     ஆசையுடன் தையவளை வரவேற்க
    ஆயிரமாயிரம் ஆருயிர் நோய்களை 
     அடியோடழிக்க
    அள்ளிக் கொண்டே உயிர் கொண்டோடும்
     அகிலத்தை எச்சரிக்க
    இயற்கையின் சீற்றத்தின் இன்னல்கள் நீங்கி – உலகு
     இன்புற்றுப் பிரபாலிக்க
    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
     உள்ளங்கள் ஒழிந்து போக 
    உறவொன்று உண்டென்றும் பகையில்லை உலகிலென்றும்
     உண்மையை உலகுணர
    காலத்தை வென்று மனிதன் காவியம் படைக்கும்
     காலம் விரைந்து வந்தடைய
    இருசுடர் ஒளியெலாம் மனிதன்
     இதமாய்க் கட்டுக்குள் அடக்க
    தையவளென நாமமிட்டன்பாய் அழைத்து
     தையவளைய்க் கேட்கிறேன்
    தையவளே!
    வழிசொல்வாயா? எமக்கு வழிசொல்வாயா?


    2 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

        காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாரு...