• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 2 டிசம்பர், 2012

    01.12.2012 அன்று செல்வன் தி.நிரோஜன் அரங்கேற்ற வாழ்த்துப்பா


     எனது குரலில் கேட்ட அம்புக்குறியை அழுத்துங்கள்


    திருநாவுக்கரசு மைந்தன் புகழாரம் பாட நாதுணிந்தபோது
    நாலாயிரம் வார்த்தைகள் நாவிலே  வந்து நின்று நடனம் புரிகின்றன
    சுந்தரத் தமிழாலே சொல்லாரம் சூட்ட நான் சொல்லெடுக்கும்போது
    சுவையான அவர் குரலினிமை பாடென சொல்லாட்சி ஆணையிடுகிறது.

    கலைமகளும் மகிழ்ந்தணையும் கலைமைந்தன் கவின் மைந்தன்
    நடம்புரியும் நடராஜன் நலம்சேர்ந்த அபிநய நர்த்தகன்
    தடம்பதிக்கும் சொல்லாலே குரலெடுக்கும் இசைவித்தகன்
    தனம்சேர குலம்சேர குணம்சேர உன்னத உறவிணைப்பாளன்

    இராகதாள பாவ முத்திரைகள் - இவர்
    உடலோடு உயிரோடு உணர்வோடு உறைந்தாள
    அதரங்கள் நகையாள அழகு அபிநயங்கள் முகங்காட்ட
    சிலம்பொலியும் சேர்ந்தாட சிருங்காரம் சில காட்ட
    அடவுகளின் துணையோடு அவதாரம் தசம்காட்ட
    அங்கங்களின் அசைவுகளில் அரங்கேற்றம் களைகட்ட
    அற்புதமாய் பரத அரங்கிங்கு வெற்றி நடைபோட்டது

    நற்றாய் பெற்ற நறுந்தவதா லுதித்த நன்மகவென
    உற்றாரும் மற்றாரும் நல்லறிவுற்றாரும் உரைத்திடவே
    ஞாலத்தின் மேன்மைக்காய் ஞானமாம் பரதத்தை
    வானுயரப் புகழ்பரப்பி வாழ்வாங்கு வாழவேண்டும்
    இன்னிசையும் பரதமும் திக்கெட்டும் நின்புகழ்பரவ
    இறையருளும் நின்உழைப்பும் இணைந்தேகூடவேண்டும்
    நடராஜன் அருளாலே நவரசன் நர்த்தகன் நிரோஜன்
    நன்மகனாய் நற்கலைஞனாய் நற்கல்விமானாய்
    உலகெங்கும் உலாவர மாதார வாழ்த்துகிறேன்







    3 கருத்துகள்:

    1. நவரசன் நர்த்தகன் நிரோஜன்
      நன்மகனாய் நற்கலைஞனாய் நற்கல்விமானாய்
      உலகெங்கும் உலாவர மாதார வாழ்த்துகிறேன்

      தங்கள் வாழ்த்தோடு எனது வாழ்த்துக்களும்

      பதிலளிநீக்கு
    2. அழகிய படைப்பு. அருமையான வரிகள். வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...