• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

    தெவிட்டா இன்பம்


    தெவிட்டா இன்பம்



    என்னைத் தொட்டுச் செல்லும் மேகம் 
    எதையோ சொல்லி மறைந்து சென்றது.
    தமிழும் இனிதே தமிழ்க் கவியும் இனிதே
    கற்பனை இனிதே காட்சியும் இனிதே
    கண்கள் மூட மறுக்கிறது. 
    காட்சிகள் பரந்து கிடக்கிறது.
    ஆயிரம் விழிகள் இருக்க வேண்டும் 
    ஆண்டவன் படைப்பை அநுபவிக்க,
    ஆயிரம் வாய்கள் இருக்க வேண்டும்
    இயற்கையின் அழகை வர்ணிக்க.

    காற்றும் என்னைத் தடுக்கவில்லை,
    மழையும் என்னை விரட்டவில்லை.
    தாளம் போடும் குடையின் துளிகள்
    கற்பனை விரிக்கத் தளமும் ஈன்றது.
    காற்றும் மரமும் கதைகள் பேசும் 
    கானக் குயில்கள் கவிகள் பாடும்
    வானும் மலையும் உரசிக் கொள்ளும்
    வனப்பினைப் பகர வாய்கள் போதா
    வகைவகைப் பச்சைக்கம்பளம் விரித்ததாய்
    பரந்து கிடந்த நிலத்தினில் புரண்டேன் 
    தமிழால் துள்ளிப் பாடம் சொன்னேன்
    தரித்து மெல்ல மீண்டும் வந்தது
    மலைகள் கற்ற தமிழின் பாடம்
    மீண்டு வந்து இதயம் நுழைந்தது

    இறைவனை மெல்ல வரவழைத்து - அவன் 
    காதனில் ஒருமுறை கேட்க வேண்டும்
    மனிதனைப் படைத்ததும் ஏன் இறைவா?
    இயற்கையைப் படைத்ததும் ஏன் இறiவா?
    மனிதனைப் படைத்தது நிஜமானால் 
    இயற்கையை இரசிக்கப் படைத்தாயா? - இல்லை
    இயற்கையை அழிக்கப் படைத்தாயா?
    மரங்களின் அழகை இரசிக்காமல்
    தரித்து நல் இன்பம் காண்பான்
    மலையின் அழகை இரசிக்காமல் 
    குடைந்து மெல்லக் கல் எடுப்பான்
    சுத்தக்காற்றை சுவாசிக்காது 
    தொழிற்சாலைகள் கட்டித் துயர் தருவான்
    பாடும் குயிலை இரசிக்காது 
    பார்வைக்கு வைத்துப் பயன்பெறுவான்
    காட்டுமிருகம் வேட்டையாடி 
    கூட்டில் கொண்டு அடைத்து வைத்து
    காசு உழைத்துக் களித்திருப்பான்

    எத்தனை அழகு இயற்கையில் இருக்க
    இவற்றிற் கெல்லாம் சமாதிகட்டி
    தாய்ச்சியில் பொரியும்மீன் எடுத்து
    தாளிதம் செய்த குழம்பில் விட்டு
    அவித்தசோற்றில் குழைத் தெடுத்து
    உண்டு மகிழும் இன்பம் மட்டும்
    உயர்வே என்று உணரும் வாழ்வு
    வாழும் மனிதர் ஆயிரமே.
    வீட்டுக்கு வீடு கதைகள் பேசி
    வீணே காலம் கழிப்பவரும்
    நாட்டுநடப்பு பேசிப்பேசி
    நல்ல பொழுதைக் கழிப்பவரும் 
    காட்டுவழியே நடந்து நடந்து 
    கால்கள் போன போக்கில் எல்லாம்
    வீட்டு எல்லை மறந்து உள்ளம்
    நாட்டம் கொண்டு நாட்டைவிட்டு
    தெவிட்டா இன்பம் தேடித்தேடித்
    தெரிந்து வர வாரீர்வாரீர்

    1 கருத்து:

    1. இயற்கையை தன் சுய நலத்திற்காக சுரண்டுவது மனிதன் வாடிக்கை. இயற்கையின் தெவிட்டா இன்பத்தை உணரவைக்கும் கவிதை

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...