• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 27 நவம்பர், 2021

    செலவு அழுங்குவித்தல்

     


    சங்க இலக்கியங்களிலே மிகவும் அற்புதமான பாடல்களால் எம்முடைய இதயங்களில் நிலைத்து நிற்பவை அகத்திணைப் பாடல்கள். அதிலே செலவு அழுங்குவித்தல் என்னும் பகுதி நெஞ்சை அள்ளக்கூடிய பகுதியாகும். பொருள் வழிப் பிரிதலும் பிரிவை விரும்பாது அதனை தடுக்க எடுத்துக்கூறுகின்ற காரணங்களும் "செலவு அழுங்குவித்தல்" என்ற கருத்தமைந்த பாடல்களில் அழகாக கையாளப்பட்டுள்ளன. அழகும் சுவையும் நிறைந்த இந்த இலக்கியத்தை சுவைக்க தமிழ் வான் அவை நடத்தும் இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் கலந்து சிறப்பியுங்கள். இலக்கிய இன்பம் பருக ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றேன்.

    திகதி: 28.11.21 ஞாயிற்றுக் கிழமை

    இந்தியாவில் இருந்து முனைவர் க. ரேவதி அவர்களும்
    சிங்கப்பூரில் இருந்து முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் அவர்களும் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள்.
    மதிப்புரை வழங்க முனைவர் கோ.கீதா
    முனைவர் இரா. குணசீலன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

    1 கருத்து:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

        காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாரு...