தமிழ் வான் அவை மாதம் தோறும் நடத்துகின்ற இணைய வழி பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு இம்மாதம் 25.07.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை இந்திய நேரம் 17.30 க்கும் ஐரோப்பிய நேரம் 14.00 மணிக்கும் நாட்டரியலில் நம்பிக்கைகள் பற்றிப் பேசப்பட இருக்கின்றது.
இந்நிகழ்வில் நாட்டுப்புற நம்பிக்கைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் இரா.காமராசு அவர்களும் சங்க இலக்கியத்தில் நம்பிக்கைகள் என்ற தலைப்பில் முனைவர் சக்தி ஜோதி அவர்களும் உரையாற்ற இருக்கின்றார்கள்.
இதைவிட தத்தம் பகுதிகளில் காணப்படுகின்ற நம்பிக்கைகள் பற்றி பலர் உரையாற்ற இருக்கின்றார்கள். இந்த நம்பிக்கைகள் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனவா, மூட நம்பிக்கைகளை ஏற்படுத்துகின்றனவா என்று ஆராய இருக்கின்றோம்
அனைவரும் கீழே தரப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி Zoom ஊடாக இணைந்து கொள்ளுங்கள். அனைவரையும் தமிழ் வான் அவை அன்புடன் அழைக்கின்றது
நன்றி
Zoom-Meeting beitreten
https://us02web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09
Meeting-ID: 250 977 0769
Kenncode: 246810
நேரம் இருப்பின் கலந்து கொள்கிறேன்...
பதிலளிநீக்குஅழைப்பிற்கு
பதிலளிநீக்குநன்றி சகோதரி