• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 21 நவம்பர், 2020

    திருமதி வந்தது எப்படி





    ஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம் தான். இதைச் சொல்வது ஆண்களுடைய வாயாக இருந்தாலும் மனதளவில் பெண் ஆண் என்ற வேறுபாடு எம்முடைய தமிழர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை என்றே சொல்லியாக வேண்டும். ஆண்களுக்குள்ளே ஒரு அதிகார மனப்பாங்கு இருந்து கொண்டே இருக்கின்றது. இது மரபணுக்களுக்குள் இருந்து வந்தது என்று சொல்பவர்கள் உண்டு. உண்மையில் உயிர்கள் வலிமை குறைந்தவை வலிமை கூடியவை என்று படைக்கப்படுவதில்லை. வளர்க்கப்டும் முறையிலேதான் அனைத்தும் தங்கியிருக்கின்றது. 

    எமது கலாசாரத்திலே பெண் ஆணைத் திருமணம் செய்யும் போது அந்தப் பெண்ணுடைய பெயர் திருமதி என அடைமொழியிட்டு கணவனுடைய பெயருக்கு மாற்றப்படுகின்றது. இவ்வாறு பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன?  என்று நோக்கினால், அதுகூட தன்னுடைய சொத்து என வாங்கிய பொருளாகவே பெண் பாவிக்கப்பட்டிருக்கின்றாள். இது பற்றி ஆராயப் புகும்போது விடைகாண ஒரு கருவின் வளர்ச்சி பற்றி சற்றுச் சிந்திப்போம்.

    தாயின் கருப்பை நோக்கி நீந்திச் செல்லுகின்ற விந்தணுக்களில் ஒரேயொரு விந்தணு மட்டும் பெண்ணின் முட்டைக் கருவுடன் இணைகின்றது அப்போது ஆண் விந்துக் கலங்களின் தலைப்பகுதி சினைமுட்டையுடன் சவ்வுப் பகுதியை உடைத்துக் கொண்டு உட்செல்லுகிறது. விந்தின் வால் பகுதி வெளியே துண்டிக்கப்பட தலைப்பகுதி உள்ளே செல்ல முட்டையின் தோல்பகுதி இறுக்கமடைந்து மூடிக் கொள்ளும் வேறு எந்த விந்தணுவும் உட்செல்லாதவாறு சவ்வு இறுக்கமடைந்து  மூடிக்கொண்டு கருவைப் பாதுகாக்கும். பெண்ணின் முட்டையிலுள்ள xx என்னும் குரொமோசோம் இருக்கின்றது. ஆணின் விந்தணுவில் xy என்னும் குரோமோசோம் இருக்கின்றது. இப்போது பெண்ணின் ஒரு x ம் ஆணின் x அல்லது y இணையும் போது பிறக்கும் குழந்தை பெண்ணா ஆணா எனத் தீர்மானிக்கப்படுகின்றது. ஆணிடமிருந்து y   சேர்ந்தால் xy என்னும் குரொமோசோம் அமைப்புள்ள ஆண்பாலும்   x சோர்ந்தால்  xx என்னும் குரொமோசோம் உள்ள பெண்ணாகவும் குழந்தை உருவமெடுக்கின்றது. இந்த குரொமோசோமுக்குள் பரம்பரை மரபணுக்கள் ஒளிந்திருக்கும் என்பது உண்மை. DNA இல் (Deoxyribonucleic Acid) மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதிகள் மரபணு((Gene)எனப்படுகின்றன. உயிர் வளர்ச்சிக்குரிய மரபுக் கட்டளைகள் DNA இல் தங்கியிருக்கின்றன. நாம் வளர்வது எமது அங்கங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது எல்லாம் மரபணுக்களின் தாக்கத்தினாலேயே அமைகின்றன. ஒரு குழந்தையை உருவாக்குவதில் ஆணுக்கு ஒரு பங்கு இருந்தாலும் அந்தக் குழந்தையை தங்க வைத்துப் பராமரித்து உலகத்திற்குக் கொண்டுவரக் கூடிய தொழிற்சாலை பெண்ணிடம் மட்டுமே இருக்கின்றது. 

    கருக்கட்டல் நிகழ்ந்து 2 கிழமைகளின் பின் பனிக்குடப்பை உருவாகும். இது நீரினால் நிரப்பப்படும் இந்நீர் கொழுப்பு, புரதம், காபோவைதரேற்றுப் போன்ற அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொண்டிருக்கும். விந்தணுவும் முட்டைக்கருவும் இணைந்து ஒரு கலமாகி பின் 12 மணித்தியாலங்களில் இரண்டாகப் பிரிந்து பின் 12 மணித்;தியாலங்களில் நான்காகப் பிரிந்து 6 நாள்களின் பின் சிறிய உருண்டையாக உருமாறும். இப்போது பலோப்பியன் குழாயிலிருந்து கருப்பை நோக்கி கரு நகர்ந்து செல்கிறது. 7 நாள்களில் தன்னை நோக்கி வந்த கருவை கருப்பையானது ஓரிடத்தில் தங்க வைக்கின்றது. 6 முதல் 12 வாரங்களில் அங்கிருந்து அழகான குழந்தையாக வளர்த்தெடுக்கின்றது. 

    22 ஆவது நாள் இதயத்துடிப்பு ஆரம்பித்தாலும் இதயம் 56 ஆம் நாளுக்குப் பின்பே முழுவடிவமுமாக வளருகின்றது. 

    16 வாரத்தில் சிறுநீரகம் செயற்படத் தொடங்கும். 

    ஆணுமன்றி பெண்ணுமன்றி ஒன்றாக இருக்கும் கருவில் யனெசழபநளெ  என்னும் ஹோமோன் உற்பத்தி செய்யத் தொடங்கும் போது ஆணாக 4 ஆவது மாதத்தில் தன்னுடைய உறுப்புக்களை வளர்க்கத் தொடங்குகின்றது. 

    33 ஆம் நாள் காது வளர ஆரம்பித்து 6 ஆவது மாதத்தில் குழந்தை கேட்கும் சக்தியைப் பெறுகின்றது. 

    31 ஆம் நாள் கண்கள் 40 ஆம் நாள் இமைகள், 7 ஆவது மாதம் பார்க்கும் சக்தி பெறல் 70 ஆவது நாளில் அனைத்து உறுப்புக்களும் உருவாகத் தொடங்குகின்றன. ‘embryo’ஆக இருந்த கரு ‘fetus’ஆக மாறுகின்றது.

    நரம்பு மண்டலங்கள் 5 ஆவது மாதம். குழந்தை 9 அங்குல நீளம் 

    6 ஆவது மாதம் கண் இமைகளில் மயிர்கள் தோன்றுகின்றன. 

    இவ்வாறு குழந்தை கருவறையில் வளர்ச்சியடைகின்றது. ஆகவே குழந்தை கருப்பையில் வளருகின்ற போதே மரபணுக்களைத் தாங்கியே வளர்கின்றது என்பது உண்மையே. அதில் பரம்பரை அணுகுமுறையில் ஆணின் ஆதிக்கம் உள்நுழைக்கப்பட்டிருக்கின்றது. 

    பிள்ளையை வளர்த்தெடுக்கும் போதே ஆண் வெளியில் சென்று வேலை செய்பவன். அவனுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும். களைத்து வருவான் அவனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அவன் எங்கள் ராசா என்று சொல்லிச் சொல்லி அவர்களை ராசாவாகவே மாற்றி விடுகின்றார்கள். அவர்களுக்கும் மனதுக்குள் ஆதிக்க உணர்வு ஊறிவிடுகின்றது. இவ்வாறு மெல்ல மெல்ல மனித வளர்ச்சியில் போதிக்;கப்பட்ட உணர்வுகளே ஊறியிருக்கின்றன

    ஒரு ஆணாக குழந்தையை வளர்த்தெடுக்கும் போது சூழ்நிலை பெற்றோர் பண்புகள் அனைத்துமே அக்குழந்தைகளில் ஆட்சி செலுத்துகின்றன. ஆரம்பத்தில் தாய்வழி சமுதாயத்திலிருந்து மெல்ல மெல்ல தந்தை வழி சமுதாயமாக மாற்றப்பட்ட நிலைமையே ஆண்களுக்கு மேலாதிக்க எண்ணம் தோன்றிய தன்மை என்றே கூற வேண்டும்.



    எப்படித்தான் பெண் சுதந்திரம் பேசினாலும் அவர்களுக்குள்ளேயே மனதுக்குள்ளே தன்னைவிட தன் மனைவி உயர்ந்து விடுவாளோ என்ற பயம் அவர்களிடம் இருக்கும். இதனாலேயே சத்தமாகப் பேசுவதும், நாகரீகம் அற்ற முறையில் நடப்பதும், அடித்துத் துன்புறுத்துவதும் நடைபெறுகின்றது. சத்தமாகப் பேசுகின்ற போது தம்முடைய இயலாமையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் நடந்து கொள்ளுகின்றார்கள். 

    இயற்கையிலேயே ஆண் வலிமையானாவன் பெண் மென்மையானவள் என்று புகழ்வது போல் சொல்லிச் சொல்லியே பெண்ணை அடிமைகளாக்கி விட்டார்கள். மாதவிடாய்க் காலங்களில் இயல்பாகவே உடலிலும் உள்ளத்திலும் பெண்களுக்கு மாற்றம் ஏற்படுவது இயல்;பே. ஆனால் அதனால் பெண் வலிமை குறைந்தவள் என்று கூறிவிட முடியாது. இந்த மாதவிடாய் ஆணுக்கு ஏற்பட்டால் அவர்கள் கூட இந்த இயல்புடையவர்களாகவே காணப்படுவார்கள். மனிதன் தாங்கும் வலி 42 அலகுகளாக இருக்க பிரசவ வலியானது 52 அலகுகளாக இருக்கின்றது. இது 20 எலும்புகள் ஒன்றாக உடைவதுபோன்ற வலியுடையது. இவ்வாறு வலி பொறுத்து குழந்தையைப் பிரசவித்துவிட்டு மீண்டும் அடுத்த குழந்தைக்குத் தயாராகும் மனத் தைரியம் பெண்ணுக்கு உண்டு. ஆனால், ஆண்களோ ஒரு தடிமல் வந்தால் போதும் இறக்கும் நிலைமையில் இருப்பது போல் வீட்டையே இரண்டாக்கிப் போடுவார்கள். ஒரு தடிமலையே தாங்க முடியாதவர்கள் வலிமையுடையவர்காகத் தம்மை பிரகடனப்படுத்துவார்கள். வலிமையற்றவள் வலிமையற்றவள் என்று சொல்லிச் சொல்லியே பெண்ணைத் தமக்கு அடிமைகயாக ஆண்கள் வைத்திருக்கின்றார்கள். மனம் என்பது ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுகின்ற போது அதுவாகவே ஆகிவிடும் தன்மையுள்ளது. ஏனென்றால் மூளையிலுள்ள பதிவுகளே உடலை வழிநடத்துகின்றது. ஒருவனை நோயாளி நோயாளி என்று சொல்லிக் கொண்டு வாருங்கள் அவன் நோயாளியாகிவிடுவான் என்னுடைய யூரியூபில் கீழேயுள்ள லிங்கை அழுத்திப் பாருங்கள் ஒரு பிள்ளையைத் தாய் நோயாளியாக்கி சக்கரநாற்காலியில் அமர வைத்த கதையை அறிந்து கொள்வீர்கள். எனவே வலிமை என்பது இருபாலாருக்கும் உண்டு.

    அமெசன் காட்டிலுள்ள பெண்களைப் பாருங்கள் ஒரு ஆணுக்குச் சமமான வேலைகள் அத்தனையும் செய்வார்கள், மிருகங்களை வேட்டையாடுவது மரங்களைத் தறிப்பது என்று நாமெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத  பலவிதமான வேலைகளைச் செய்வார்கள் யுரியூப் போய்ப் பார்த்தீர்கள் என்றால் அறிவீர்கள்.  


    மனைவியின் கைப்பக்குவம் போல் வராது. நல்ல சுவையாக அவளாலேதான் சமைக்க முடியும். அவள் உணவைத் தட்டில் போட்டுத் தந்தாலேயே என்னால் சாப்பிட்ட உணர்வு வரும் என்று புகழ்ந்து சொல்லிச் சொல்லியே அவளை சமைக்கும் யந்திரமாக ஆக்கிவிட்டார்கள். ஆண் பெண்ணைப் புகழுகின்ற போது அதன் உள்ளார்ந்த தன்மையை பாருங்கள் அங்கு ஒரு வஞ்சப் புகழ்ச்சி அடங்கியிருக்கும். இவ்வாறுதான் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் போது அவளை வைத்துப் பராமரிக்க சீதனம் என்ற பெயரில் பணத்தையும் கொடுத்துப் பெயரையும் திருமதி என்று மாற்றிக்  கொடுத்துவிட்டார்கள். ஏனென்றால் இடைப்பட்ட காலத்தில் பெண்ணுரிமை பறிக்கப்பட்டது. பெண் கல்வி முடக்கப்பட்டது. கையிலே அகப்பை திணிக்கப்பட்டது. அப்போது ஆணாதிக்கம் வளர்க்கப்பட்டு பெண் திருமதியானால், ஆனால், இப்போது பெண் தன்னுடைய பெயரை எப்படி வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்னும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுவோம். 




     

    2 கருத்துகள்:

    1. இடைப்பட்ட காலத்தில் பெண்ணுரிமை பறிக்கப்பட்டது. பெண் கல்வி முடக்கப்பட்டது. கையிலே அகப்பை திணிக்கப்பட்டது.

      உண்மை சகோதரி
      உண்மை

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...